ஆலங்குடி அருகே 11-ம் வகுப்பு மாணவியை 5 மாத கர்ப்பம் ஆக்கிய 21 வயது இளைஞரை கைது செய்து ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா திருமணஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் 16 வயதான பள்ளி மாணவி. இவர் அரசு பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு அருகில் நடந்த திருவிழாவிற்கு சென்றபோது அவருக்கும் கறம்பக்குடி தாலுகா நெய்வேலி பகுதியைச் சேர்ந்த 21 வயதான சிவா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் காதலாக மாறிய நிலையில், சிவா பதினோராம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி மூன்றுக்கும் மேற்பட்ட முறைகள் அவருடன் உடலுறவு வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மாணவியின் வயிறு பெரிதாகவும் மிகவும் சோர்வாகவும் காணப்பட்டதால் இதுகுறித்து மாணவியின் தாயார் மாணவியுடன் விசாரித்ததில் இந்த உண்மைகள் தெரியவந்துள்ளது உடனடியாக மாணவியை புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.
5 மாதம் கர்ப்பமாக உள்ள மாணவியின் விவரம் குறித்து மருத்துவர்கள் கூறிய அறிவுரையின்படி மாணவியின் தாயார் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளைஞர் சிவா மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நெய்வேலி கிராமத்தைச் சேர்ந்த சிவாவை(21) கைது செய்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் அவரை ஆஜர் படுத்தி புதுக்கோட்டை கிளைச் சிறையில் அவரை அடைத்தனர்.
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
தொடர் மரணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்…
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றனர். இதையும்…
This website uses cookies.