திருவள்ளூர் :கிணற்றைக் காணவில்லை என்று திரைப்பட பாணியில் ஏழு குளங்களைக் காணவில்லை என பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இளைஞர் பதாகை ஏந்தி மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த பூதூர் கிராமத்தில் உள்ள ஏழு குளங்களை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், இது குறித்து பலமுறை வட்டாட்சியர் முதற்கொண்டு மாவட்ட ஆட்சியர் வரை புகார் அளித்தும் ஆக்கிரமிப்பு குறித்த எச்சரிக்கை பெயர் பலகை வைத்த பிறகும் ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை எனக் கூறப்படுகிறது.
இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூதூர் கிராமத்தை சேர்ந்த சிவகுமார் என்ற இளைஞர் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.
ஏழு குளங்களை காணவில்லை எனும் வாசகம் பொறிக்கப்பட்ட பெயர் பலகையோடு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட இளைஞரை பொன்னேரி சாராட்சியர் அலுவலக ஊழியர்கள் சாராட்சியரிடம் அழைத்துச் சென்றனர்.
இது குறித்து விசாரித்த சாராட்சியர் ஐஸ்வர்யா உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இச்சம்பவத்தால் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.