திருவள்ளூர் :கிணற்றைக் காணவில்லை என்று திரைப்பட பாணியில் ஏழு குளங்களைக் காணவில்லை என பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இளைஞர் பதாகை ஏந்தி மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த பூதூர் கிராமத்தில் உள்ள ஏழு குளங்களை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், இது குறித்து பலமுறை வட்டாட்சியர் முதற்கொண்டு மாவட்ட ஆட்சியர் வரை புகார் அளித்தும் ஆக்கிரமிப்பு குறித்த எச்சரிக்கை பெயர் பலகை வைத்த பிறகும் ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை எனக் கூறப்படுகிறது.
இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூதூர் கிராமத்தை சேர்ந்த சிவகுமார் என்ற இளைஞர் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.
ஏழு குளங்களை காணவில்லை எனும் வாசகம் பொறிக்கப்பட்ட பெயர் பலகையோடு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட இளைஞரை பொன்னேரி சாராட்சியர் அலுவலக ஊழியர்கள் சாராட்சியரிடம் அழைத்துச் சென்றனர்.
இது குறித்து விசாரித்த சாராட்சியர் ஐஸ்வர்யா உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இச்சம்பவத்தால் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.