கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் அரசு பேருந்து மோதி படுகாயமடைந்த நபருக்கு சிகிச்சை அளிக்காமல், முகவரி கேட்டு காலம் தாழ்த்தியதாக செவிலியர்களிடம் இளைஞர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் செருப்பாலூர் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியம் (50). கூலி தொழிலாளியான இவர் தக்கலை அருகே மேட்டுக்கடை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த அரசு பேருந்து ஒன்று ஆரோக்கியம் மீது மோதியுள்ளது. இதில், இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, அவர் படுகாயமடைந்த நிலையில், அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மீட்டு சிகிட்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால், படுகாயமடைந்து ரத்தம் சொட்ட சொட்ட இருந்த ஆரோக்கியத்திற்கு செவிலியர்கள் முதலுதவி கூட செய்யாமல், முகவரியை கேட்டு காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர் செவிலியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தக்கலை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ராஜையன் அவர்களை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்ட போது, தனது கவனத்திற்கு வரவில்லை என்றும், உடனடியாக விசாரித்து ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி உரிய சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்வதோடு, செவிலியரிடமும் விசாரணை நடத்தப்படும், என விளக்கமளித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.