Categories: தமிழகம்

கோவிலில் யாருக்கு முதல் மரியாதை என்பதில் தகராறு.. பழிக்கு பழிவாங்க இளைஞர் கொலை : பரபரப்பு திருப்பத்தில் 3 பேர் கைது!!

கல்லணை அருகே கிளிக்கூடு கிராமத்தில் முன் விரோதத்தில் பழிக்கு பலியாக கடந்த 24 ந்தேதி நள்ளிரவில் இளைஞரை கொடூரமாக வெட்டி படுகொலை செய்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கல்லணை அருகே ஸ்ரீரங்கம் தாலுகாவில் உள்ள கிளிக்கூடு கிராமம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் 23 வயதான பிரகாஷ். அதே பகுதியை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பாண்டியன். இவரது மகன் 35 வயதான அசோக்.

இந்த இரண்டு நபர்களின் குடும்பத்தினர் உறவினர்கள் ஆவார்கள். இந்த இரண்டு குடும்பத்தாருக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு கிளிக்கூடு கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் தேங்காய் உடைத்து மரியாதை செய்வது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு வந்தது.

இதில் அசோக்கின் சித்தப்பா நல்லேந்தரன் மகன் 30 வயதான அறிவழகன் என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு பிரகாஷ் மற்றும் அவரது ஆதரவாளர்களான மதியழகன், ஆனந்த், ஆகியோரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கில் தற்போது முன்விரோதம் காரணமாக அறிவழகன் கொலைக்கு பழிக்குப் பழியாக பிரகாஷ் என்பவரை அசோக் மற்றும் அவருடைய நண்பர்கள் இரண்டு பேர் என 3 பேர் கொண்ட கும்பல் கடந்த 24 ந்தேதி நள்ளிரவில் பிரகாசை கொடூரமாக வெட்டி படுகொலை செய்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் வழக்கு பதிவு செய்த கொள்ளிடம் போலீசார் தப்பியோடிய கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் பிரகாசை கொலை செய்த வழக்கில் கிளிக்கூடு பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த பாண்டியன் மகன் 35 வயதான அசோக், திருச்சி குழுமணி பேரூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மகன் 35 வயதான ஆட்டோ சக்தி என்கின்ற சக்திவேல், திருச்சி பாலக்கரை எடத்தெரு காமியான் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த சங்கர் மகன் கார்த்திக் ஆகியோரை கொள்ளிடம் போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?

யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…

7 hours ago

ஊழல் கூட்டணி எங்களை பற்றி பேசுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருது : இறங்கி அடிக்கும் நிர்மலா சீதாராமன்!

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…

9 hours ago

லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!

லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…

9 hours ago

திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…

10 hours ago

சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?

கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…

10 hours ago

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

11 hours ago

This website uses cookies.