Categories: தமிழகம்

கோவை ஈஷா யோகா மையத்தில் இளைஞர் மர்ம மரணம்? சந்தேகத்தை கிளப்பும் இயற்கை வளம் பாதுகாப்பு கூட்டியக்கம்!!

கோவை ஈஷா யோகா மையத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டதை ஏன் அந்த நிறுவனம் புகாராக அளிக்க வில்லை என்பதை விசாரிக்க வேண்டும் என இயற்கை வளம் பாதுகாப்பு கூட்டியகத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை ஈஷா யோகா மையத்தில் கடந்த 22 ஆம் தேதி ஆந்திராவைச் சேர்ந்த கொள்ளு ரமணா என்பவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை தொடர்பாக ஈஷா யோகா மையத்தை சேர்ந்தவர்கள் யாரும் புகார் அளிக்காத நிலையில்,செம்மேடு கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தவள்ளி ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார்.

அதில் ஈஷா யோகா மையத்தில் உள்ள கொன்றை பில்டிங் முதல் தளத்தில் கொள்ளு ரமணா என்பவர் தூக்கு மாட்டி இறந்து விட்டார் என்றும், தான் அங்கு சென்ற பொழுது பிரேத விசாரணைக்காக அரசு மருத்துவமனைக்கு உடலை எடுத்துச் சென்று விட்டார்கள் எனவும் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் அடிப்படையில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து ஆலாந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதனிடையே இறந்த கொல்லு ரமணாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனிடையே இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயற்கை வளம் பாதுகாப்பு கூட்டியக்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் தனியார் இடமான ஈஷா வளாகத்தில் தற்கொலை செய்து கொண்ட நபர் குறித்து கிராம நிர்வாக அலுவலர் புகார் கொடுக்க வேண்டும் எனவும், ஈஷா மையத்தில் ஏன் யாரும் புகார் கொடுக்கவில்லை என விசாரிக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பபட்டுள்ளது.

மேலும் உடலை முதலில் பார்த்த நபர்கள் ஏன் காவல் துறையிடம் புகார் கொடுக்க வில்லை என்பதை விசாரிக்க வேண்டும் எனவும், ஆயிரக்கணக்கானோர் வேலை செய்யும் தனியார் நிறுவனமான ஈஷா யோகா மையத்தின் நிர்வாகிகள் ஏன் தற்கொலை குறித்து புகார் கொடுக்கவில்லை எனவும் விசாரிக்க வேண்டும் எனவும் இயற்கை வளம் பாதுகாப்பு கூட்டியக்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் இந்த தற்கொலைக்கும் ஈஷா யோகா மையத்திற்கும் தொடர்பில்லை என காட்டுவதற்காக கிராம நிர்வாக அலுவலர் மூலம் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுவதாகவும் அந்த இயற்கை வளம் பாதுகாப்பு கூட்டியக்கத்தின் நிர்வாகியும், திராவிடர் விடுதலை கழக பொறுப்பாளருமான நேருதாஸ் தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?

யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…

3 hours ago

ஊழல் கூட்டணி எங்களை பற்றி பேசுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருது : இறங்கி அடிக்கும் நிர்மலா சீதாராமன்!

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…

4 hours ago

லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!

லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…

4 hours ago

திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…

5 hours ago

சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?

கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…

5 hours ago

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

6 hours ago

This website uses cookies.