தமிழகம்

பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர்… அலறிய பயணிகள் : கோவை காந்திபுரத்தில் அதிர்ச்சி!

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சிவானந்தா காலனிக்கு செல்லும் தனியார் பேருந்து ஒன்று இன்று காலை 8 மணிக்கு புறப்பட்டது.

அந்த பேருந்து அங்கு உள்ள அண்ணா சிலை அருகில் வளைவில் திரும்பிய போது அந்த வழியாக நடந்து சென்ற நபர் ஒருவர் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கிக் கொண்டார். இதைப் பார்த்த பயணிகள் சத்தம் போடவும் பேருந்து ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தினார்.

இதையும் படியுங்க: தியாகம்னா என்னனு தெரியுமா? அமைச்சர் செந்தில் பாலாஜி X தளத்தில் கொடுத்த பதிலடி!!

அதற்குள் பஸ் சக்கரத்தில் சிக்கிய அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.இதுகுறித்து காந்திபுரம் போலீசார் மற்றும் போக்குவரத்து பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இறந்த அந்த வாலிபர் பெயர் அஜ்மல் (வயது 40) கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்தது.

அவர் இரவு முழுவதும் அங்கு இருந்ததாகவும், கையில் 500 ரூபாய் நோட்டை வைத்துக் கொண்டு இருந்ததாகவும், பேருந்து வந்த போது பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.

சிலர் அவர் தற்கொலை செய்ய பின் சக்கரத்தில் விழுந்ததாகவும் கூறினர்.இதனால் போலீசார் குழப்பம் அடைந்தனர். எனவே அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதற்காக அண்ணா சிலை அருகில் உள்ள பிரபல ஹோட்டல் மற்றும் இனிப்பு கடைகள் உள்ள கண்காணிப்பு கேமராவில் உள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

28 minutes ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

51 minutes ago

ஏடிஜிபி வழக்கில் கறார் காட்டிய உச்சநீதிமன்றம்? உத்தரவுக்கு பணிந்த தமிழக அரசு?

காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…

2 hours ago

இனி கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை? காவல் ஆணையர் திடீர் உத்தரவு…

நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…

3 hours ago

ராமாபுரம் மெட்ரோ விபத்து; கோடி ரூபாய் அபராதம்; அதிரடி காட்டிய நிர்வாகம்

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…

3 hours ago

கமல்ஹாசனுக்கு பணிந்த கர்நாடக அரசு? தக் லைஃப்க்கு பச்சை கொடி!

“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…

5 hours ago

This website uses cookies.