கன்னியாகுமரி ; கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இளைஞர் ஒருவர் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சுசீந்திரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பறக்கையை சேர்ந்தவர் கண்ணன் (28). இவருக்கும், கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட வாலிபர் ஒருவரின் மனைவிக்கும் தவறான தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து, கண்ணன் அந்த பெண்ணுடன் நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனியில் வீடு எடுத்து குடியிருந்து வருகிறார். இதனிடையே, இந்த பெண்ணுக்கும் கண்ணனுக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்ததால் இருவரும் பிரிந்து விட்டதாகவும், கண்ணன் கஞ்சா உபயோகித்து விட்டு அந்தப் பெண்ணை அடிக்கடி தொந்தரவு செய்ததாக சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் நேற்று மாலை கண்ணனை காவல் நிலையம் அழைத்திருந்தனர்.
இந்த நிலையில், இன்று பிற்பகல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த கண்ணன் திடீரென தனது கையில் இருந்த கத்தியால் கழுத்தை இரண்டு முறை அறுத்து தற்கொலைக்கு முயன்ற போது மயங்கி விழுந்தார். அவரை நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்று தாஸ் ஆகியோர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.