விழுப்புரம் அருகே குடிபோதையில் இளைஞர்கள் கருங்கற்களை கொண்டு அரசு பள்ளி கதவு மற்றும் சுவர்களை உடைக்கும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் அருகே உள்ள வீரங்கிபுரம் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
பள்ளி முடிந்தவுடன் அந்தப் பகுதியில் இருக்கும் இளைஞர்கள் இந்தப் பள்ளியில் அமர்ந்து மது குடித்து வருகின்றனர் என்று ஏற்கனவே கிராம மக்கள் புகார் தெரிவித்திருந்த நிலையில், இந்தப் பள்ளியின் கட்டிடத்தை கற்களால் கொண்டு அடித்து உடைக்கப்பட்டு பின்னர் கருங்கல்களைக் கொண்டு வகுப்பறை இரும்பு கதவை உடைக்கும் காட்சி வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
இவர்கள் அந்தப் பகுதியில் தினந்தோறும் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டதோடு தற்போது பள்ளி கட்டிடத்தையும் உடைக்கத் துவங்கி உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து கண்டாச்சிபுரம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.