திண்டுக்கல்: பழனி பேருந்து நிலையத்தில் ஆதரவற்றவர்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற பலரும் ஆங்காங்கே தங்கியுள்ளனர்.
இந்நிலையில் பழனி பேருந்து நிலையத்தில் ஆதரவற்றவர்களை குறிவைத்து அவர்களிடம் உள்ள பணத்தை பறிக்கும் செயலில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில் பழனியை அடுத்த ஆயக்குடியைச் சேர்ந்த ராமமூர்த்தி, காளிதாஸ் இருவரும் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும், இவர்கள் மீது ஏற்கனவே ஆயக்குடி காவல் நிலையத்தில் அடிதடி, வழிப்பறி போன்ற குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.
பிடிபட்ட நபர்களிடமிருந்து சிறிய கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த பழனி நகர போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.