திண்டுக்கல்: பழனி பேருந்து நிலையத்தில் ஆதரவற்றவர்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற பலரும் ஆங்காங்கே தங்கியுள்ளனர்.
இந்நிலையில் பழனி பேருந்து நிலையத்தில் ஆதரவற்றவர்களை குறிவைத்து அவர்களிடம் உள்ள பணத்தை பறிக்கும் செயலில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில் பழனியை அடுத்த ஆயக்குடியைச் சேர்ந்த ராமமூர்த்தி, காளிதாஸ் இருவரும் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும், இவர்கள் மீது ஏற்கனவே ஆயக்குடி காவல் நிலையத்தில் அடிதடி, வழிப்பறி போன்ற குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.
பிடிபட்ட நபர்களிடமிருந்து சிறிய கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த பழனி நகர போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
This website uses cookies.