நாட்டின் சில பகுதிகளில் 5G வெளியாகி கொண்டிருக்கும் இந்த சமயத்தில் மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்றுவதற்கான புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர். மோசடி செய்பவர்கள் வோடஃபோன், ஏர்டெல் அல்லது ஜியோவின் வாடிக்கையாளர் சேவை மைய நிர்வாகிகளாக தங்களை காட்டிக் கொண்டு, எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல் வாடிக்கையாளர்களிடம் அவர்களின் 4G சிம்களை 5G க்கு மேம்படுத்தி தர உதவுவதாக கூறுகிறார்கள்.
வாடிக்கையாளர்களுக்கு ஃபிஷிங் லின்குகளை அனுப்புவதன் மூலம் இந்த மோசடி
நடத்தப்படுகிறது. வங்கி பாஸ்வேர்ட் அல்லது OTP கள் போன்ற தனிப்பட்ட அல்லது முக்கியமான தகவல்களை பெற்று அவர்களின் வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுக்கிறார்கள்.
5G மோசடி: பாதுகாப்பாக இருப்பது எப்படி?
*மோசடி செய்பவர்கள் முதலில் இலக்கிடப்பட்ட பயனர்களுக்கு இணைப்பை அனுப்புவார்கள் என்பதால் விழிப்புடன் இருங்கள்.
*சிம் சேவைகளை மேம்படுத்த, லின்குகளை கிளிக் செய்யும்படி கேட்கப்படும்போது அவ்வாறு செய்ய வேண்டாம்.
*எந்தவொரு சைபர் குற்றத்தையும் புகாரளிக்க 1930 என்ற ஹெல்ப்லைன் எண்ணை அழைக்கவும்.
இந்தியாவில் 5G தொழில்நுட்பம் அக்டோபர் 1ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. சில தொழில்நுட்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டவுடன் 5G மொபைல் ஃபோனைக் கொண்ட நுகர்வோர் சேவையைப் பயன்படுத்தத் தொடங்கலாம். தற்போதைய நிலவரப்படி, மக்கள் 4G இன் அதே விலையில் 5G சேவைகளைப் பயன்படுத்தலாம். ஆனால் புதிய கட்டணங்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று மொபைல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
விஜய்யின் கடைசி திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசு, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில்…
நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். கட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மார்க்கெட் இறங்காமல் ஏறுமுகமாகவே இருக்கிறார்.…
This website uses cookies.