டாப் நியூஸ்

கேப்டன் மகனுக்கு புது பதவி.. புதிர் போட்ட பிரேமலதா விஜயகாந்த்!

விஜய பிரபாகரனுக்கு பதவி வழங்குவது குறித்து தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

சென்னை: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், இன்று (நவ.10) தேமுதிகவின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சி தலைமை அலுவலகம் உள்ள சென்னை கோயம்பேட்டில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆண்டுதோறும் தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவு தினம் அன்று அஞ்சலி செலுத்துதல், பூரண மதுவிலக்கு, சொத்துவரி உயர்வுக்கு கண்டனம் என 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த்திடம், விஜய பிரபாகரனுக்கு கட்சியில் பதவி வழங்குவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய அவர், “விஜய பிரபாகரனுக்கு கட்சியில் பதவி அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

அவருக்கு கட்சியில் பதவி கொடுப்பது தொடர்பாக செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். மேலும், செயற்குழு கூட்டத்தில் விஜய பிரபாகரனுக்கு மட்டும் அல்லாமல், இன்னும் பலருக்கும் பொறுப்பு வழங்கப்பட உள்ளது” எனக் கூறினார்.

மேலும், 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் தான் கூட்டணி என மீண்டும் பிரேமலதா விஜயகாந்த் உறுதிபட தெரிவித்தார். முன்னதாக, நடைபெற்று முடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் விஜய பிரபாகரன் களமிறக்கப்பட்டார்.

இதையும் படிங்க: கொதித்தெழுந்த விஜயபாஸ்கர்.. தென்காசி அரசு மருத்துவமனையின் அவலம்!

இதன் முடிவில், மிகவும் கணிசமான வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார். ஆனால் கடும் போட்டியாளராக விஜய பிரபாகரன் இருந்ததால், காங்கிரஸ் மற்றும் திமுக தலைமை மிக நுண்ணிப்பாக கவனிக்க வேண்டிய தொகுதியாக விருதுநகர் தொகுதி மாறியது. மேலும், மாணிக்கம் தாகூரின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கும் விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.