கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்று விடுவார்கள் .
அப்போது வீட்டில் சிறுமி மட்டும் இருந்து வந்துள்ளார் . இவர்களின் வீடு அருகில் இன்னொரு குடும்பத்தினர் குடியிருந்து வந்துள்ளனர் .அவர்களுக்கு 14 வயதில் மகன் உள்ளார் .
பள்ளியில் படித்து வந்த மாணவன் அடிக்கடி சிறுமியின் வீட்டுக்கு செல்வது வழக்கம் .இந்நிலையில் பெற்றோரிடம் சிறுமி தனக்கு வயிற்றுவலி இருப்பதாக கூறியுள்ளார் .
இதனையடுத்து பெற்றோர் அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதை கண்டுபிடித்துள்ளனர் .
சிறுமிக்கு 16 வயதே ஆவதால் இதுபற்றி ஆஸ்பத்திரி நிர்வாகம் குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர் .
இதில் சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற 14 வயது சிறுவன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது .இதுபற்றி வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக சிறுவன் மிரட்டியதால் இதனை வெளியில் சொல்லவில்லை என சிறுமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சிறுவன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.