புதுக்கோட்டை ; 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ள அறிவிப்பு குறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை ரிசர்வ் வங்கி கலந்து ஆலோசனை செய்திருக்க வேண்டும் என்றும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:- தமிழ்நாட்டு அரசினுடைய நிலைப்பாடு என்பது இத்தகைய முடிவுகளை ரிசர்வ் வங்கி எடுக்கிற போது, இதில் சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய கருத்துக்களை ஏற்கனவே கேட்டிருக்க வேண்டும் என்பது தான்.
மாநிலத்திலிருந்து நிறைய நபர்கள் உள்ளனர், மாநில அரசாக இருந்தாலும் பொதுமக்களாக இருந்தாலும் அவர்களிடத்தில் முறைப்படி இது போன்ற முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன்பு ரிசர்வ் வங்கி கலந்து ஆலோசித்து இருக்க வேண்டும். வருங்காலங்களில் இது போன்ற முடிவுகளை எடுக்கும் போது கலந்து ஆலோசிக்க வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு.
ஒரு முடிவை எடுக்கும்போது பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கும்போது இந்திய பொருளாதாரத்தை கடுமையாக பாதித்தது. அப்போது திமுக எதிர்த்து உள்ளது.
அதற்கு மாறுபட்ட நடவடிக்கைகளை பிற்காலத்தில் எடுக்கும் போதும் சம்பந்தப்பட்ட இருக்கக்கூடிய மாநில அரசுகளாக இருக்கக்கூடிய அனைத்து மாநிலத்தைச் சேர்ந்தவர்களிடமும், இது போன்ற விஷயங்களில் கொள்கை முடிவு எடுக்கும்போது கலந்து ஆலோசனை செய்திருப்பது முறையாக இருந்திருக்கும், எனக் கூறினார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.