எமனாக வந்த பள்ளி வாகனம்…ரிவர்ஸ் எடுக்கும்போது சக்கரத்தில் சிக்கிய சிறுவன்: சென்னை தனியார் பள்ளியில் அதிர்ச்சி…அறிக்கை அளித்த உத்தரவு..!

சென்னை: சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளி வேன் மோதி 2ம் வகுப்பு மாணவர் தீக்சித் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல். இவர் பெங்களூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் தீக்சித். ஆழ்வார் திருநகரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்குலேசன் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இன்று வழக்கம்போல், மாணவர் தீக்சித் பள்ளி வேனில் பள்ளிக்கு வந்துள்ளார் . வேனில் இருந்து மற்ற மாணவர்கள் இறங்கி சென்றபோது, வேனில் தான் மறந்து வைத்துவிட்டு வந்த பொருளை எடுப்பதற்காக பள்ளி வேனை நோக்கி ஓடி வந்துள்ளார் தீக்சித்.

மாணவர்கள் அனைவரும் இறங்கி விட்டதால் வேனை பார்க்கிங்க செய்வதற்காக வாகன ஓட்டுநர் பூங்காவனம் வேனை ரிவர்ஸ் எடுத்துள்ளார். அந்த சமயத்தில் வேன் நகர்ந்ததால், வேனில் ஏற முயற்சித்த மாணவர் தீக்சித் தவறி கீழே விழுந்து வேனில் சிக்கியுள்ளார்.

வாகனத்தின் சக்கரம் பள்ளி மாணவன் தீக்சித் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே தீக்சித் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

இது குறித்து உடனே வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பள்ளி வாகன ஓட்டுனரான முகலிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பூங்காவனம் என்பவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில காலத்திற்கு முன் பள்ளி வாகனங்களில் சிக்கி குழந்தைகள் உயிரிழப்பது தொடர் கதையாகி வந்த நிலையில், கொரோனா ஊரங்கால் பள்ளிகள் மூடப்பட்டு சமயத்தில், இதுபோன்ற துயர சம்பவங்கள் நிகழாமல் இருந்தது. தற்போது, மீண்டும் பள்ளி சக்கரத்தில் பிஞ்சு சிறுவன் உயிரை விட்ட சம்பவம் பெற்றோர்கள் இடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் கிளீனர்களின் கவனக்குறைவும், அஜாக்கிரதையான மெத்தனப்போக்கால் நிகழும் இதுபோன்ற துயர சம்பவங்கள் எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

UpdateNews360 Rajesh

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

1 day ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

2 days ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

2 days ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

2 days ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

2 days ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

2 days ago

This website uses cookies.