நானும் சோல்ஜர் ஆவேன்.. ராணுவத்திற்கு கடிதம் எழுதிய வயநாடு சிறுவன்: ராணுவம் அனுப்பிய சோ ஸ்வீட் பதில்…!!

வயநாடு பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 350 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் இன்னும் பலரை தேடும் பணி துரிதகதியில் நடைபெற்று வருகிறது.வயநாடு நிலச்சரிவில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் 500 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். ராணுவ வீரர்கள் 2 தினங்களுக்கு முன்பு வெறும் 31 மணி நேரத்தில் இரும்பாலான 190 மீ பாலத்தை முண்டக்கை – சூரல் மலை பகுதிகளுக்கு இடையே அமைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.ராணுவ வீரர்களின் மீட்புப் பணிகளால் ஈர்க்கப்பட்ட ரேயன் என்ற மூன்றாம் வகுப்பு படிக்கும் AMLP பள்ளி மாணவர் மலையாளத்தில் கடிதம் ஒன்றை ராணுவத்திற்கு எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அன்புள்ள இந்திய ராணுவமே எனது அன்பிற்குரிய வயநாடு ஒரு பெரிய நிலச்சரிவினால் தாக்கப்பட்டு அழிவை சந்தித்துள்ளது. இடுபாடுகளில் சிக்கியவர்களை நீங்கள் காப்பாற்றுவதை பார்த்து நான் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்தேன்.மேலும் 2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தை விடவும் மலைபாங்கான கிராமப்புறங்களை உள்ளடக்கிய தேயிலை தோட்டங்களுக்கு புகழ்பெற்ற வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மிகவும் மோசமானது ராணுவ வீரர்களின் சேவையால் நான் கவரப்பட்டேன். உங்களைப்போலவே ராணுவத்தில் நானும் சோல்ஜர் ஆக இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அந்த கடிதத்தில் எழுதியிருந்தார்.அதற்கு பதில் அளித்த ராணுவம்…

அன்புள்ள மாஸ்டர் ராயன்,

உங்கள் இதயப்பூர்வமான வார்த்தைகள் எங்களை ஆழமாகத் தொட்டன. இக்கட்டான காலங்களில், நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம், உங்கள் கடிதம் இந்தப் பணியை மீண்டும் ஆழப்படுத்துகிறது. உறுதியுடன் பணியாற்ற ஆற்றல் தருகிறது.உங்களைப் போன்ற ஹீரோக்கள் எங்களால் முடிந்ததைச் செய்ய எங்களுக்கு ஊக்கம் அளிக்கிறார்கள். நீங்கள் சீருடை அணிந்து எங்களுடன் நிற்கும் நாளுக்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். நாம் ஒன்றுபட்டு நமது தேசத்தை பெருமைப்படுத்துவோம்.

இளம் வீரரே, உங்கள் தைரியத்திற்கும் உத்வேகத்திற்கும் நன்றி.
“ஆயிரம் நன்றி”என்று அந்த பதில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனதை நெகிழச்செய்யும் இந்த கடிதத்தை சமூக வலைத்தளத்தில் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

Sudha

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

57 minutes ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

59 minutes ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

1 hour ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

2 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

3 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

4 hours ago

This website uses cookies.