நானும் சோல்ஜர் ஆவேன்.. ராணுவத்திற்கு கடிதம் எழுதிய வயநாடு சிறுவன்: ராணுவம் அனுப்பிய சோ ஸ்வீட் பதில்…!!

வயநாடு பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 350 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் இன்னும் பலரை தேடும் பணி துரிதகதியில் நடைபெற்று வருகிறது.வயநாடு நிலச்சரிவில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் 500 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். ராணுவ வீரர்கள் 2 தினங்களுக்கு முன்பு வெறும் 31 மணி நேரத்தில் இரும்பாலான 190 மீ பாலத்தை முண்டக்கை – சூரல் மலை பகுதிகளுக்கு இடையே அமைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.ராணுவ வீரர்களின் மீட்புப் பணிகளால் ஈர்க்கப்பட்ட ரேயன் என்ற மூன்றாம் வகுப்பு படிக்கும் AMLP பள்ளி மாணவர் மலையாளத்தில் கடிதம் ஒன்றை ராணுவத்திற்கு எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அன்புள்ள இந்திய ராணுவமே எனது அன்பிற்குரிய வயநாடு ஒரு பெரிய நிலச்சரிவினால் தாக்கப்பட்டு அழிவை சந்தித்துள்ளது. இடுபாடுகளில் சிக்கியவர்களை நீங்கள் காப்பாற்றுவதை பார்த்து நான் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்தேன்.மேலும் 2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தை விடவும் மலைபாங்கான கிராமப்புறங்களை உள்ளடக்கிய தேயிலை தோட்டங்களுக்கு புகழ்பெற்ற வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மிகவும் மோசமானது ராணுவ வீரர்களின் சேவையால் நான் கவரப்பட்டேன். உங்களைப்போலவே ராணுவத்தில் நானும் சோல்ஜர் ஆக இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அந்த கடிதத்தில் எழுதியிருந்தார்.அதற்கு பதில் அளித்த ராணுவம்…

அன்புள்ள மாஸ்டர் ராயன்,

உங்கள் இதயப்பூர்வமான வார்த்தைகள் எங்களை ஆழமாகத் தொட்டன. இக்கட்டான காலங்களில், நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம், உங்கள் கடிதம் இந்தப் பணியை மீண்டும் ஆழப்படுத்துகிறது. உறுதியுடன் பணியாற்ற ஆற்றல் தருகிறது.உங்களைப் போன்ற ஹீரோக்கள் எங்களால் முடிந்ததைச் செய்ய எங்களுக்கு ஊக்கம் அளிக்கிறார்கள். நீங்கள் சீருடை அணிந்து எங்களுடன் நிற்கும் நாளுக்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். நாம் ஒன்றுபட்டு நமது தேசத்தை பெருமைப்படுத்துவோம்.

இளம் வீரரே, உங்கள் தைரியத்திற்கும் உத்வேகத்திற்கும் நன்றி.
“ஆயிரம் நன்றி”என்று அந்த பதில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனதை நெகிழச்செய்யும் இந்த கடிதத்தை சமூக வலைத்தளத்தில் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

Sudha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.