தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதி : பாஜகவை வளர விடாமல் நடக்கும் சதி.. டெல்லி குழு அளித்த புகாரில் பரபர!!

தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதி : பாஜகவை வளர விடாமல் நடக்கும் சதி.. டெல்லி குழு அளித்த புகாரில் பரபர!!

திமுக அரசால் பாஜகவினர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்படுவது, நள்ளிரவு மற்றும் அதிகாலையில் கைது செய்வது, ஜாமீன் பெறுவதை தடுக்கும் நோக்கில் வார இறுதி நாட்கள் அல்லது தொடர் விடுமுறை நாட்களில் கைது செய்வது போன்ற செயல்களில் திமுக அரசு ஈடுபடுவது குறித்து ஆய்வு செய்ய டெல்லி பாஜக மேலிடம் 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது.

இந்தக் குழுவில் கர்நாடகா முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா, ஆந்திரா பாஜக தலைவர் புரந்தேஸ்வரி, எம்.பிக்கள் சத்யபால் சிங், பி.சி.மோகன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த நிலையில், 4 பேர் குழுவினர் நேற்று சென்னை வந்தனர். சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்குச் சென்று, தமிழக காவல்துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பாஜகவினரிடம் விசாரித்து, விவரங்களைக் கேட்டனர்.

தொடர்ந்து, ஆளுநர் மாளிகைக்குச் சென்ற சதானந்த கவுடா, புரந்தேஸ்வரி, சத்யபால் சிங், பி.சி.மோகன், சுதாகர் ரெட்டி, எஸ்.ஜி.சூர்யா, டால்பின் ஸ்ரீதர் ஆகியோர், திமுக அரசு, பாஜகவினர் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்து அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், அச்சுறுத்துவதாகவும் ஆளுநரிடம் புகார் மனுவை அளித்தனர்.

அதைத்தொடர்ந்து, சதானந்த கவுடா தலைமையிலான நால்வர் குழுவினர், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, சதானந்த கவுடா, திமுக அரசு, காவல்துறை மூலம் பாஜகவினருக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாகவும், இதுபற்றிய புகாரை ஆளுநரிடம் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய புரந்தேஸ்வரி, “ஏதாவது பதிவை பகிர்ந்தாலே பாஜகவினர் மீது வழக்கு பதியப்படுகிறது. எந்த அடிப்படையும் இன்றி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு போடப்படுகிறது. பாஜக தமிழ்நாட்டில் வளர்வதால் அரசு பயந்து பாஜகவினரை குறி வைக்கிறது. பொய் வழக்கு பதிவு செய்வதால் பாஜகவை சேர்ந்த செயற்பாட்டாளர்கள் ஒரு மாதம் வெளியே வர முடியவில்லை.

சனிக்கிழமை மாலை அமர் பிரசாத் வீட்டுக்கு போலீசார் சென்றனர். அமர் பிரசாத் ரெட்டி துணியை மாற்றிக்கொள்ளக் கூட அனுமதிக்கவில்லை. தங்கள் முன்பே துணியை மாற்றிக்கொள்ளுமாறு போலீசார் கூறியுள்ளனர். அவரை உடனடியாக கூட்டிச் சென்றுள்ளனர். மாலை நேரத்தில் கைது செய்ததால் அவரால் ஜாமீன் கோரக்கூட முடியவில்லை.

அண்ணாமலையின் பாதயாத்திரைக்கு இணை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார் அமர் பிரசாத் ரெட்டி. பாஜகவின் பாதயாத்திரை சிறப்பாக நடந்து, மக்கள் கூட்டம் திரண்டு வருவதால் பாதயாத்திரையை எப்படியாவது சீர்குலைக்க வேண்டும் என்பதற்காக அமர் பிரசாத்தை கைது செய்துள்ளனர்.

பாஜகவினர் மீது எஸ்.சி. எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பதிவு செய்து உடனே சிறையில் போட்டு விடுகின்றனர். ஆனால், பாஜக தொண்டர்கள் தங்களுக்கு ஏதேனும் கொடுமை நடந்து, போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கச் சென்றால், புகாரை ஏற்கவோ, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவோ போலீசார் முன்வரவில்லை. பாஜகவினர் கட்சிப் பணியாற்றக் கூடாது என்பதற்காகவே பாஜகவினரை குறிவைக்கின்றனர்.” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

1 hour ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

1 hour ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

2 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

3 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

3 hours ago

இட்லி வர தாமதானதால் ஆத்திரம்.. ஹோட்டல் கடை உரிமையாளரின் மண்டை உடைப்பு!

வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…

3 hours ago

This website uses cookies.