ஆவடி அருகே பெண்களை ஆபாசமாக பேசியதை தட்டிக்கேட்ட தாய், மகன்கள் உள்பட 12 பேரை சரமாரியாக போதை ஆசாமிகள் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அம்பத்தூர் அடுத்த திருமுல்லைவாயில் கணபதி நகர் பகுதியைச் சேர்ந்த ஏசி மெக்கானிக்குகளான அபினேஷ் (25), விஷ்ணு (22) மற்றும் முத்து ஆகிய மூன்று இளைஞர்கள், மது மற்றும் கஞ்சா போதையில் அப்பகுதியில் செல்பவர்களுடன் தகராறு செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று மாலை 3பேரும் ஆபாச வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் மாறி மாறி திட்டிக் கொண்டதாகவும், அப்பகுதியில் வசிக்கும் பெண்களையும் தரக்குறைவாக பேசியதாகவும் தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த சீதாலட்சுமி (38) மற்றும் அவரது மகன் கமலேஷ் ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் மறைத்து வைத்திருந்த இரண்டு பட்டாக்கத்திகளை எடுத்து வந்து, சீதாலட்சுமி மற்றும் அவரது மகன் கமலேஷை சரமாரியாக வெட்டி உள்ளனர்.
மேலும் படிக்க: மதுபோதையில் தகராறு… பஸ் ஸ்டேண்டில் திருநங்கைக்கு அரிவாளால் வெட்டு.. கோபக்கார இளைஞன் எஸ்கேப்!!
இதில் இருவருக்கும் தலை, கழுத்து, கை உள்ளிட்ட பல இடங்களில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த, அதே பகுதியை சேர்ந்த சந்திரலேகா (40) மற்றும் அவரது மகன் விஜய் (20) இருவரும் அவர்களை தடுக்க முயன்றனர். அப்போது, அவர்களையும் அந்த போதை இளைஞர்கள் வெட்டியுள்ளனர்.
தொடர்ந்து, அந்த வழியாக சென்று கொண்டிருந்த கணேஷ் (18) என்ற கல்லூரி மாணவன், வாகன ஓட்டிகள் என சுமார் 12 பேரை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், போதையில் சுற்றித்திரிந்த 2பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். தலைமறைவாக உள்ள முத்துவை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.