சென்னை : போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் துணை ஆணையர் நடராஜனை பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் எழிலகம் கட்டிடத்தில் போக்குவரத்து துறை ஆணையரக அலுவலகத்தில் இணை ஆணையரக மற்றும் துணை ஆணையரக அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதில், அலுவலகத்தில் உள்ள 30 உதவியாளர்களிடம் இருந்து கணகாணிப்பாளர் பதவி உயர்வுக்காக ரூ.5 லட்சம் பெறுவதாக புகார் எழுந்தது. அதன்பேரில், துணை ஆணையர் நடராஜன் என்பவரின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 14ம் தேதி திடீர் சோதனை நடத்தினர். சோதனையின் போது அவரது அலுவலகத்தில் உள்ள பணம் எண்ணும் எந்திரம் இரண்டை எடுத்து சென்று சோதனை செய்தனர்.
அதில் கணக்கில் வராத ரூ.35 லட்சம் ரொக்க பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னை துணை போக்குவரத்து அலுவலர் அலுவலகத்தில் ரூபாய் 35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது சென்னை போக்குவரத்து துணை ஆணையர் நடராஜன் திருநெல்வேலிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஆர்வலர் ஜெயராம் வெங்கடேசன், 35 லட்சம் லஞ்சம் வாங்கிய நடராஜனை கைது செய்திருக்க வேண்டும். பணி இடைநீக்கம் செய்து இருக்க வேண்டும். ஆனால் இதை செய்யாமல் அவரை பணிமாற்றம் மட்டும் செய்யும் பொழுது இதில் அமைச்சருக்கு நேரடி தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது என பதிவிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.