ரூ.35 லட்சம் லஞ்சம் வாங்கிய அதிகாரி நடராஜன் மீது நடவடிக்கை : நெல்லை மாவட்டத்திற்கு பணியிடமாற்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 March 2022, 10:19 pm
Bribery Transferred - Updatenews360
Quick Share

சென்னை : போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் துணை ஆணையர் நடராஜனை பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கம் எழிலகம் கட்டிடத்தில் போக்குவரத்து துறை ஆணையரக அலுவலகத்தில் இணை ஆணையரக மற்றும் துணை ஆணையரக அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதில், அலுவலகத்தில் உள்ள 30 உதவியாளர்களிடம் இருந்து கணகாணிப்பாளர் பதவி உயர்வுக்காக ரூ.5 லட்சம் பெறுவதாக புகார் எழுந்தது. அதன்பேரில், துணை ஆணையர் நடராஜன் என்பவரின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 14ம் தேதி திடீர் சோதனை நடத்தினர். சோதனையின் போது அவரது அலுவலகத்தில் உள்ள பணம் எண்ணும் எந்திரம் இரண்டை எடுத்து சென்று சோதனை செய்தனர்.

அதில் கணக்கில் வராத ரூ.35 லட்சம் ரொக்க பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

சென்னை துணை போக்குவரத்து அலுவலர் அலுவலகத்தில் ரூபாய் 35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது சென்னை போக்குவரத்து துணை ஆணையர் நடராஜன் திருநெல்வேலிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து சமூக ஆர்வலர் ஜெயராம் வெங்கடேசன், 35 லட்சம் லஞ்சம் வாங்கிய நடராஜனை கைது செய்திருக்க வேண்டும். பணி இடைநீக்கம் செய்து இருக்க வேண்டும். ஆனால் இதை செய்யாமல் அவரை பணிமாற்றம் மட்டும் செய்யும் பொழுது இதில் அமைச்சருக்கு நேரடி தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது என பதிவிட்டுள்ளார்.

Views: - 867

0

0