சென்னை: தமிழக சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
தமிழக சட்டசபையில் நேற்று காலை 10 மணிக்கு நிதியமைச்சர் தியாகராஜன் 2022 – 23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சட்டசபை முடிந்த பின் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
பின், சபாநாயகர் கூறியதாவது, இன்று காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். நாளை விடுமுறை.
வரும் 21ம் தேதியில் இருந்து, 23ம் தேதி வரை பட்ஜெட் மீது விவாதம் நடக்கும். எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபை கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர் பேசுவர். வரும், 24ம் தேதி நிதி அமைச்சர் தியாகராஜன், வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் பதிலுரை அளிப்பர்.
தொடர்ந்து, துணை நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். அன்றுடன் சட்ட சபை நிறைவடையும். மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்தும் தேதி, அரசு வழிகாட்டுதல் அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டு தெரிவிக்கப்படும். பட்ஜெட் மீது விவாதம் நடக்கும் மூன்று நாட்களும், கேள்வி நேரம் உண்டு. பதிலுரை அன்று கேள்வி நேரம் கிடையாது.
கடந்த கூட்டத்தை போல், இந்த கூட்டத் தொடரில் கேள்வி பதில், நிதி அமைச்சர் மற்றும் வேளாண் துறை அமைச்சர் பதிலுரை நேரடியாக ஒளிபரப்பப்படும் என தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
This website uses cookies.