ஓபிஎஸ் அனுமதியின்றி ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் கொண்டு வந்தால் அது செல்லாது என வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ஆதரவாளர்களுடன் 4-ஆவது நாளாக இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.
சென்னையில் உள்ள இல்லத்தில் ஓபிஎஸ் நடத்திய ஆலோசனையில் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், மைத்ரேயன் உள்ளிட்டோர் பபங்கேற்றனர்.
இந்த நிலையில், ஓபிஎஸ் உடனான ஆலோசனை கூட்டம் முடிந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அது செல்லாது.
தலைமையின் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கட்சியை வலுப்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவது குறித்தும் விவாதிக்கப்பட்டது என்றும் கூறினார்.
மேலும், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை, எம்பி தம்பிதுரை சந்தித்து பேசினார். அப்போது, ஓபிஎஸ் தனது கருத்தை அவரிடம் தெரிவித்தார் என்றும் கூறினார்.
அப்படி, வரும் 23-ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தொடர்பாக தீர்மானம் கொண்டு வந்தால் அதிமுக அழிவுப்பாதையை நோக்கிச் செல்லும் என்றும் குறிப்பிட்டார். இதுதொடர்பாக எடப்பாடியுடன் சந்திக்க வாய்ப்பு வந்தால், சந்திப்பேன் என உறுதி அளித்தார்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.