தன் மேல சேத்த வாரி இறைக்கற மாதிரி இருக்கு… அப்படி செஞ்சா கட்சி அழிஞ்சுரும் : அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பரபர பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
17 June 2022, 2:19 pm
Vaithilingam - Updatenews360
Quick Share

ஓபிஎஸ் அனுமதியின்றி ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் கொண்டு வந்தால் அது செல்லாது என வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ஆதரவாளர்களுடன் 4-ஆவது நாளாக இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

சென்னையில் உள்ள இல்லத்தில் ஓபிஎஸ் நடத்திய ஆலோசனையில் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், மைத்ரேயன் உள்ளிட்டோர் பபங்கேற்றனர்.

இந்த நிலையில், ஓபிஎஸ் உடனான ஆலோசனை கூட்டம் முடிந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அது செல்லாது.

தலைமையின் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கட்சியை வலுப்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவது குறித்தும் விவாதிக்கப்பட்டது என்றும் கூறினார்.

மேலும், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை, எம்பி தம்பிதுரை சந்தித்து பேசினார். அப்போது, ஓபிஎஸ் தனது கருத்தை அவரிடம் தெரிவித்தார் என்றும் கூறினார்.

அப்படி, வரும் 23-ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தொடர்பாக தீர்மானம் கொண்டு வந்தால் அதிமுக அழிவுப்பாதையை நோக்கிச் செல்லும் என்றும் குறிப்பிட்டார். இதுதொடர்பாக எடப்பாடியுடன் சந்திக்க வாய்ப்பு வந்தால், சந்திப்பேன் என உறுதி அளித்தார்.

Views: - 473

0

1