நாமக்கல் முன்னாள் அதிமுக எம்எல்ஏ வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூரில் அவரது உறவினரின் கட்டுமான நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் சட்டசபை தொகுதியில் 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருந்து வந்தவர் கே.பி.பி.பாஸ்கர். இவர் நகர அதிமுக செயலாளராகவும் இருந்து வருகிறார். இவருக்கு உமா என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். பாஸ்கர் தற்போது லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் நடத்தி வருகிறார்.
பாஸ்கர் அவரது பெயரிலும், அவரது மனைவி உமா பெயரிலும் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பெயரிலும் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளதாகவும், இந்த வருமானம் அவர்களது சட்டப்படியான வருமானத்தை விட 315 சதவீதம் அதிகம் எனவும், இதையொட்டி நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இவ்வழக்கு சம்மந்தமாக பாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் மதுரை, திருப்பூர் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளிட்ட மொத்தம் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலை 6 மணி முதல் தீவிர சோதணையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்படி திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பென்னி காம்போர்ட் பகுதியில் செயல்பட்டு வரும் ஹரி என்பவருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தில் இன்று ஐந்து பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் குழுவினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
பாஸ்கரின் உறவினர் ஹரி என்றும், பினாமி பெயரில் இந்த நிறுவனம் நடத்தி வருவதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையிலும் இந்த சோதனையானது நடைபெற்று வருவதாகவும், கட்டுமான நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் ஆவணங்கள் குறித்து தற்பொழுது சோதனை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக இந்த சோதனையானது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.