சென்னை : தேசியவாதிகளின் குரல்வளையை நசுக்கி, கருத்து சுதந்திரத்தை பறிப்பதாக கிஷோர் கே சுவாமியின் கைதுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மழையால் சென்னை பாதிக்கப்பட்ட போது தமிழக அரசு மேற்கொண்ட வெள்ள மீட்பு பணிகள் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினின் நடவடிக்கை குறித்து சமூகவலைதளங்களில் யூடியூபர் கிஷோர் கே சுவாமி விமர்சித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சென்னை மாநகர போலீஸின் சைபர் கிரைம் பிரிவிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், விசாரணைக்கு ஆஜராகுமாறு கிஷோர் கே சுவாமிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், 4 முறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார்.
இதனிடையே, முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கிஷோர் கே சுவாமி மனு தாக்கல் செய்தார். ஆனால், இந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். இதைத் தொடர்ந்து, புதுச்சேரியில் தங்கியிருந்த கிஷோர் கே சுவாமியை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், கிஷோர் கே சுவாமி கைதுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- தேசியவாதிகளின் குரல்வளையை நசுக்கி அவர்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் இந்த திமுக அரசு, தமிழக பாஜக பெண் தலைவர்களை இழிவாக பேசிய திமுக பேச்சாளரை கைது செய்யாமல் இருப்பது ஏன்?
கிஷோர் கே சாமி அவர்களின் தந்தையாரிடம் உரையாடி, தேவையான சட்ட உதவிகளை தமிழக பாஜக செய்யும் என்ற உத்தரவாதத்தை அளித்தேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
This website uses cookies.