ஊழல் செய்த கட்சிகளுடன் அண்ணாமலை கூட்டணி வைக்கமாட்டாரா? அண்ணாமலைக்கு சீமான் கேள்வி!!

மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மதுரை விமான நிலையம் வந்தார்.

மதுரை விமான நிலையத்திலிருந்து பெருங்குடி வழியாக வந்த சீமான் பெருங்குடி அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு அருகில் வைக்கப்பட்ட அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் பாஜக தலைவர் அண்ணாமலை இன்று திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை வெளியிட்டது குறித்த கேள்விக்கு.?

திமுக ஊழல் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்., அண்ணாமலை திமுக அமைச்சர்கள் ஊழல் பட்டியலை வெளியிட்டதால் அதிமுகவில் இருந்தவர்கள் எல்லாம் பரிசுத்தமானவர்கள் அல்ல.? யார் ஊழல் செய்தாலும் அவர்களுடைய ஊழல் பட்டியலை வெளியிடுவாரா.?

மேலும்., ஊழல் பட்டியலை வெளியிடும் அண்ணாமலை ஊழல் செய்தவர்களோடு கூட்டணி வைக்க மாட்டேன் என சொல்வாரா.? நேர்மையான அரசியல்வாதியாக இருந்தால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும் ஆட்சி செய்தவர்கள் மீது உள்ள ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிட வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.

தொடர்ந்து., ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த திமுக கவுன்சிலர் மீது கலாச்சத்திராவில் எடுத்த நடவடிக்கை போல் இந்த விஷயத்தில் அரசு செயல்படவில்லை குற்றச்சாட்டு நிலவுவதாக செய்தியாளர்கள் கேள்விக்கு.?

கலாஷேத்ராவில் திமுகவினர் இல்லை மாணவர்கள் தான் போராடினார்கள்., அதனால் தான் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளார். திமுகவினர் இருந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்காது.

ஒரு சிறந்த ஆட்சி என்றால் யார் தவறு செய்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுத்தால் தான் அது சிறந்த ஆட்சியாக இருக்கும் என்றார்.

சட்டமன்றத்தில் ஐபிஎல் பார்க்க டிக்கெட் வழங்க வேண்டும் என பேசியது குறித்து கேள்விக்கு.? இதுபோன்று பேசுபவர்களை தேர்வு செய்தது யார் ஒரு மோசமான ஆட்சி நடக்கிறது என்றால் அதற்கு பொறுப்பு தலைவர்கள் அல்ல அவர்களை தேர்ந்தெடுத்த மக்கள்தான் காரணம் நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்கிறது.
அதை விடுத்து விட்டு ஐபிஎல் பிரச்சனையை பேசுகிறார்கள்.
ஐபிஎல் போட்டி என்பது 5 கோடி 10 கோடி என ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் விளையாடி வருகிறார்கள். அதைப்பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை.? அது ஒரு சூதாட்டம் என்றார்.

திருமங்கலம் அருகே பணித்தள பொறுப்பாளர் பேருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்., தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்வதாக குற்றச்சாட்டு கொடுத்த கேள்விக்கு.? இந்த விவகாரத்தில் உண்மையை அறிந்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தால் தான் இது போன்ற குற்றங்கள் நிகழாமல் தடுக்க முடியும்.

பல்லை உடைத்த பல்வீர் சிங் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை., அதேபோல் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திலும் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து., பேசியவர் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.