வேலைநிறுத்தம், வார இறுதி என வங்கிகள் தொடர்ந்து 5 நாட்கள் இயங்காத நிலை ஏற்பட்டுள்ளது.
வங்கிகளுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை, ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்துவது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, காலிப் பணியிடங்களை நிரப்புவது, ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வங்கி ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் வங்கி ஊழியர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதனால், வருகிற 30 (திங்கட்கிழமை), 31 (செவ்வாய்க்கிழமை) ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் அறிவித்தது. அதன்படி, வருகிற 30, 31-ந்தேதிகளில் வேலைநிறுத்தம் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முந்தைய நாட்களான இன்று (வியாழக்கிழமை) குடியரசு தினவிழா விடுமுறை, நாளை மறுதினம் 4வது வார சனிக்கிழமை விடுமுறை, அதற்கு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வருவதால் வங்கிகள் 5 நாட்கள் இயங்காத நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இடைப்பட்ட நாளான நாளை (வெள்ளிக்கிழமை) மட்டுமே வங்கிகள் செயல்படும். வேலைநிறுத்தம், வழக்கமான விடுமுறை நாட்கள் என மொத்தம் 5 நாட்கள் வங்கிகள் செயல்படாத சூழல் ஏற்பட்டு இருப்பதால், வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கும் எனத் தெரிகிறது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.