வேலைநிறுத்தம், வார இறுதி என வங்கிகள் தொடர்ந்து 5 நாட்கள் இயங்காத நிலை ஏற்பட்டுள்ளது.
வங்கிகளுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை, ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்துவது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, காலிப் பணியிடங்களை நிரப்புவது, ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வங்கி ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் வங்கி ஊழியர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதனால், வருகிற 30 (திங்கட்கிழமை), 31 (செவ்வாய்க்கிழமை) ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் அறிவித்தது. அதன்படி, வருகிற 30, 31-ந்தேதிகளில் வேலைநிறுத்தம் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முந்தைய நாட்களான இன்று (வியாழக்கிழமை) குடியரசு தினவிழா விடுமுறை, நாளை மறுதினம் 4வது வார சனிக்கிழமை விடுமுறை, அதற்கு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வருவதால் வங்கிகள் 5 நாட்கள் இயங்காத நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இடைப்பட்ட நாளான நாளை (வெள்ளிக்கிழமை) மட்டுமே வங்கிகள் செயல்படும். வேலைநிறுத்தம், வழக்கமான விடுமுறை நாட்கள் என மொத்தம் 5 நாட்கள் வங்கிகள் செயல்படாத சூழல் ஏற்பட்டு இருப்பதால், வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கும் எனத் தெரிகிறது.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.