பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தாக கைது செய்யப்பட்ட பாஜக பிரமுகர் அமர்பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வீடு உள்ளது. இதன் அருகே அனுமதியின்றி சுமார் 50 அடி உயரம் கொண்ட பாஜக கொடிக்கம்பம் நடப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள், கொடிக்கம்பத்தை அகற்றினர்.
இதனால் ஆத்திரமடைந்த பாஜக தொண்டர்கள் அந்த வாகனத்தின் கண்ணாடியை கற்களை எறிந்து உடைத்தனர். இதன் காரணமாக பரபரப்பு நிலவியது. மேலும், வாகனத்தின் கண்ணாடியை உடைத்த பாஜகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கில் பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், அவர் தலைமறைவானதால் கைது செய்யப்படாமல் இருந்த நிலையில், கானாத்தூர் தனிப்படை போலீசார் குரோம்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரது கைது நடவடிக்கைக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், பாஜக பிரமுகர் அமர்பிரசாத் ரெட்டியை மேலும் 3 வழக்குகளில் சென்னை போலீசார் அவரை கைது செய்தனர். கோட்டூர்புரத்தில் தமிழக அரசின் பேனரை சேதப்படுத்திய வழக்கிலும், நுங்கம்பாக்கத்தில் போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட வழக்கிலும், தென்காசியில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கிலும் அடுத்தடுத்து கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, நிலுவையில் உள்ள வழக்குகளிலும் அவரை கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.