திண்டுக்கல் : பாஜகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுகவில் தன்னை இணைத்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதனால், அதிமுக – பாஜகவினரிடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இருகட்சியினரும் பரஸ்பரமாக வார்த்தை போரில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளிப்படையாகவே தனது விரக்தியை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில், பழனியை சார்ந்த பாஜக முக்கிய நிர்வாகி பொன். கந்தசாமி கட்சியில் இருந்து விலகி, அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார்.
பாரதிய ஜனதா கட்சியின் கல்வியாளர் பிரிவு மாநிலச் செயலாளராக இருந்தவர் பழனியை சார்ந்த காணியாளர் பண்ணாடி ராஜா என்கிற பொன்.கந்தசாமி. கடந்த பல வருடங்களாக பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பொறுப்புகளில் பொன்.கந்தசாமி கட்சி பணியாற்றி வந்தார். சமீப காலமாக உள்ளூர் கட்சி நிகழ்ச்சிகளுக்கு கந்தசாமியை அழைக்காமல் மாவட்டச் செயலாளர் கனகராஜ் தவிர்த்து வந்துள்ளார்.
இதனால் மாவட்ட செயலாளர் கனகராஜ் மற்றும் பொன். கந்தசாமி இடையே பனிப்போர் நிகழ்ந்து வந்தது. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சென்னை பசுமைவழிச்சாலையிலுள்ள இல்லத்தில் நேரில் சந்தித்த பொன். கந்தசாமி, தன்னை அ.இ.அ.தி.மு.கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகி திமுக, அதிமுகவில் இணையக்கூடிய சம்பவங்களால் தமிழக பாஜக அதிர்ச்சியடைந்துள்ளது.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.