மதுரை : தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற சூழலில் ஆண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற நிலையே நிலவுவதாக பாஜக பிரமுகர் காயத்திரி ரகுராம் குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜக மதுரை மாநகர மகளிர் அணி சார்பில் மதுரை சோமசுந்தரம் காலனி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் 30க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த விழாவில் பாஜக மாநில மகளிர் அணி தலைவி மீனாட்சி மற்றும் கலை மற்றும் பண்பாட்டு பிரிவின் மாநிலத் தலைவி காயத்ரி ரகுராம் ஆகியோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து அவர்களுக்கு பாஜக மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் மருத்துவர் சரவணன் உற்சாக வரவேற்பு அளித்தார்.
பின்னர் கலை மற்றும் பண்பாட்டு பிரிவு மாநிலத் தலைவி காயத்ரி ரகுராம் பேசும்போது;- தமிழகத்தில் பாஜக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆழமாக வேரூன்றி உள்ளது. அதேபோல் நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் பெருவாரியான இடங்களில் வெற்றி பெரும்.
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு என்பதே இல்லை. தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்று வரும் வழிப்பறி கொள்ளை சம்பவங்களால் ஆண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதே தெரிகிறது. மத்திய அரசு உக்ரேனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் சில ஊடகங்கள் இதில் திமுக அரசு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து வருகிறது, எனக் கூறினார்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.