நாடாளுமன்றத்தில் சிலப்பதிகாரம் குறித்து பேசிய திமுக எம்பி கனிமொழிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
மத்திய அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்பி கனிமொழி, ‘சிலப்பதிகாரத்தை பிரதமர் மோடி படித்து, கண்ணகியின் கோபத்தால் எப்படி பாண்டிய மன்னனின் செங்கோல் வளைந்தது என்பது குறித்து அறிந்து கொள்ள வேண்டும்,’ எனக் கூறியிருந்தார்.
கனிமொழியின் இந்தப் பேச்சுக்கு என் மண் என் மக்கள் யாத்திரை மேற்கொண்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் பேசியதாவது :- சகோதரி கனிமொழி கருணாநிதி அவர்கள் முதலில் பெரியாரைப் பற்றி படிக்க வேண்டும். பெரியார் சிலப்பதிகாரத்தை குறித்து என்ன சொல்லியிருக்கிறார் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
கடந்த 1951ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி சேலத்தில் நடந்த ஒரு மாநாட்டில் பேசிய தந்தை பெரியார், கணவன் கோவலன் இறந்த நிலையில் கோவம் கொண்ட கண்ணகி ஒரு பக்கத்துக் கொண்டையை எடுத்து மதுரை மீது எறிகிறாளாம், அது உடனே தீப்பிழம்பாக மாறி மதுரையையே சுட்டு எரிக்கிறதாம், இதை நம்ப முடிகிறதா? பாண்டிய மன்னன் செய்த தவறுக்கு மதுரை மக்கள் என்ன செய்வார்கள், இதுதான் கற்புக்கரசிக்கு இலக்கணமா?” என்று கூறினார்.
ஆகவே, பிரதமர் மோடி அவர்களை சிலப்பதிகாரம் படிக்க சொல்ல வேண்டாம். பெரியார் சிலப்பதிகாரத்தை பற்றி என்ன சொல்லி இருக்கிறார் என்று முதலில் நீங்கள் படியுங்கள், என தெரிவித்துள்ளார்.
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…
வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…
சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
This website uses cookies.