கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மறுவாக்கு பதிவு நடத்த தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளிக்க உள்ளதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
கோவை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் அதன் கட்சித் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இந்த நிலையில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அங்கப்பா பள்ளியில் பூத் எண் 214 ல் 1353 ஓட்டு உள்ளது. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் 1353 ஓட்டுக்கள் இருந்த நிலையில் தற்போது வெறும் 523 ஓட்டுக்கள் மட்டுமே உள்ளன. மீதம் 830 ஓட்டுகள் காணவில்லை.
மேலும் படிக்க: ‘இப்ப மட்டும் ஏன் வர்றீங்க..?’ அமைச்சரை காரை விட்டு இறங்க விடாமல் விரட்டியடித்த மக்கள்… தூத்துக்குடியில் பரபரப்பு..!!!
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாஜகவினர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கேட்டனர். மேலும் இது ஒவ்வோரு வாக்காளர் எண்ணையும் மொபைலில் ஐடியை வைத்து செக் பண்ணும் போது அதில் அந்த எண்கள் இல்லை என்றே வருகிறது என்று அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என சாலையில் உட்கார்ந்து பாராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேரில் வந்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அப்போது, வேண்டுமென்றே வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாகவும், ஓட்டு போட அனுமதி மறுக்கப்பட்டவர்கள் அனைவரும் இணைந்து மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் மறுவாக்கு பதிவு நடத்த மனு கொடுக்க உள்ளதாக தெரிவித்தார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.