லஞ்ச வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்ட நிலையில், பாஜகவை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளராக உள்ள டாக்டர் சுரேஷ் பாபு என்பவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக, மதுரை அமலாக்கத்துறை பிரிவில் பணியாற்றி வந்த அன்கித் திவாரி என்பவர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல்லில் உள்ள மதுரை புறவழிச் சாலையில் வைத்து கைது செய்யப்பட்ட அவர், நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை ஆபிஸிற்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர விசாரணை நடத்தினர். அதேவேளையில், மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் 13 மணிநேரம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்களை சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
லஞ்ச வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, அமலாக்கத்துறை மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் அமலாக்கத்துறையையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதனிடையே, இது மனிதர் செய்த தவறு என்றும், அமலாக்கத்துறையின் தவறு அல்ல என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் தன் பங்கிற்கு விளக்கம் கொடுத்திருந்தார்.
இப்படியிருக்கையில், அண்ணாமலையுடன் கடந்த சில தினங்களாக மோதல் போக்கில் இருந்து வரும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், இந்த விவகாரத்தில் பாஜகவை கடுமையாக விமர்சித்து X தளத்தில் பதிவு போட்டுள்ளார். அதில், கூறியிருப்பதாவது :- ED அலுவலர்கள் லஞ்சம், உள்துறை அலுவலகம் ஊழல், சி.ஏ.ஜி. அறிக்கையில் 7.5 லட்சம் கோடி இமாலய ஊழல்.. என்ன இது? BJP – பாரதீய ஜனதா பார்டியா? Bribery Janatha Party யா?, எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவு வைரலாகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.