சென்னை : சென்னையில் தனியார் பள்ளி வாகனம் மோதி 2ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த நிலையில், தனியார் பள்ளி வாகனங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சென்னை- வளசரவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் வளாகத்தில் ஓட்டுநரின் அலட்சியத்தால், பள்ளி வாகனம் மோதி 2ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளனர்.
இதைத் தொடர்ந்து, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும், அந்தப் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் இன்று நேரில் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், தனியார் பள்ளி வாகனங்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பள்ளி வாகனங்களில் அதிகளவில் மாணவர்களை ஏற்றக்கூடாது. பள்ளி வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும்
மாணவர்களை அழைத்து வரும் பள்ளி வாகனத்தில் உதவியாளர் நியமிக்கப்பட்ட வேண்டும்.பள்ளி வாகனங்களை ஓட்டும்போது திரைப்படப் பாடல்களை போடக் கூடாது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.