கூட்டணி கட்சி என்பதற்காக திமுக செய்யும் கொடுமைகளை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை – ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இளங்கோ தெருவில் அமைந்துள்ள 150க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்துத் தள்ளும் பணியில் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தமிழக அரசு இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே, வீடுகளை அப்புறப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் குடியிருந்து வந்த கண்ணன் என்பவர் தீக்குளித்து உயிரிழந்து போனார். அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கும், கண்ணனின் குடும்பத்திற்கும் ஆறுதல் தெரிவித்து விட்டு வருகின்றனர்.
கடந்த 8ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கோவிந்தசாமி நகர் மக்களை நேரில் சந்தித்து பேசினார்.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான வன்னியரசு, உயிரிழந்த கண்ணையன் உடலுக்கு மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பேசியதாவது :- தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடந்து வருவதாக கூறுகின்றனர். இந்த ஆட்சி மக்களுக்கானது, சாமானியர்களுக்கானது என்றெல்லாம் சொல்லுகின்றனர். ஆனால், இங்கே மண்ணின் மைந்தர்கள் நிலங்களை ஆக்கிரமித்து விட்டதாகக் கூறி, அவர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
தமிழக அரசின் இந்த நடவடிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து உயிரிழந்த கண்ணன் என்பவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணமாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். ஆனால், ரூ.50 லட்சமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.
நிலம் அப்புறப்படுத்துவது தொடர்பான பிரச்சனையை அரசு கொள்கை ரீதியில் கையாள வேண்டும். திமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதால், தமிழகத்தில் நடக்கும் இதுபோன்ற கொடுமைகளை கண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி அமைதியாக இருக்காது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் குடியிருப்புகளில் இருக்கின்றனர். தேர்வு நடந்து வரும் சூழலில், இதுபோன்ற சூழ்நிலையில் பொதுமக்களை அப்புறப்படுத்தும் செயல்களில் அரசு ஈடுபடுவது நல்லாட்சிக்கு கலங்கத்தை ஏற்படுத்தும், என அவர் கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.