மோடி ஒரு FRAUD… நாடாளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு வேலையில் பாஜக : திருமாவளவன் கடும் தாக்கு…!!

நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் தேர்தலை புறக்கணிக்கக் கூட தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விசிக ஆர்ப்பாட்டத்தில் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு உரையாற்றியதாவது :- சனாதன சக்திகளின் அரசியலை அழிக்க நெருப்பை பற்ற வைக்கிறோம். ஜனவரியில் இ.வி.எம் இயந்திரத்தை முற்றாக நீக்கி வாக்குச்சீட்டை பயன்படுத்த வேண்டும் என்றோம். இந்த முறை 100 சதவீதம் ஒப்புகைச்சீட்டை பயன்படுத்தி முடிவுகளை அறிவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இண்டியா கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இந்த நிலைபாடு.

2019க்கு முன்பு நடந்த 5 மாநிலத் தேர்தலில் பாஜக படுதோல்வி. ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரு வெற்றி. இது சில்லுமுல்லு நடவடிக்கை. 39 இலட்சம் இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆனால், தேர்தல் ஆணையம் 20 இலட்சம் என்று தவறாக தகவல் தெரிவிக்க வேண்டும்? மீதி 19 இலட்சம் இயந்திரங்கள் எங்கே?
கடந்த தேர்தலில் 393 இடங்களில் இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் வேறுபாடு உள்ளது.

220 தொகுதிகளில் பதிவான வாக்குகளை விட எண்ணப்பட்ட வாக்குகள் அதிகமாக வந்துள்ளது. மீதிக் தொகுதிகளில் குறைவாக வந்துள்ளது.‌ இது மோசடியை காட்டும் வகையில் உள்ளது. வல்லுனர்கள் இந்த மோசடியை கண்டறிந்துள்ளனர். இது இயந்திர வாக்குப்பதிவல்ல… மோடி வாக்குப்பதிவு இயந்திரம் என்று ராகுல் பேசியுள்ளார்.

விசிக தேசிய கட்சியல்ல, ஆனால் தேசிய கட்சிகள் பதறாத பிரச்சனைகளிலும் நாம் போராடுகிறோம்.
ஜனநாயகம், அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும். பாஜக நீதி நெறிகளை பேசுவார்கள், விரதம்‌ இருப்பார்கள். ஆனால் அனைத்தையும் அரசியலுக்குவார்கள். எதிர்கட்சிகளை நக்கல் அடிக்கிறார்.

இந்த பத்து ஆண்டுகள் மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? எந்தப்பக்கம் திரும்பினாலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மோடியின் பினாமி அதானி. அதனால் அவரின் பெயரில் சொத்துகள் எழுதப்படுகின்றன. மோடி ஒரு ஃப்ராடு. அமெரிக்கா, ரஷ்யா பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளே இயந்திர‌ வாக்குபதிவை நம்பாமல் வாக்குச்சீட்டை பயன்படுத்துகின்றன.

ஜெர்மனி, அயர்லாந்து, பங்களாதேஷ் போன்ற நாடுகள் வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தி, பின்னர் மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாறின. இந்தியாவில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் வலுப்பெற வில்லை என்பது வருத்தத்திற்குரியது. தேர்தல் நன்கொடை பத்திரம் மிகப்பெரிய மோசடி. இவ்வளவுப்பெரிய மோசடியை சட்டப்பூர்வமாக மோடி கும்பலால் மட்டுமே செய்ய முடியும்.

விடுதலைச் சிறுத்தைகள் தேர்தலை புறக்கணிக்கக் கூட தயாராக இருக்கிறோம். நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டுமென்பதே என் முன்னால் உள்ள சவால். அரசமைப்புச் சட்டத்திற்கே பாஜக வேட்டு வைத்துள்ளது. மீண்டும் பாஜக வந்தால் அதிபர் ஆட்சி முறை, எனக் கூறியுள்ளார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!

லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…

2 minutes ago

திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…

57 minutes ago

சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?

கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…

1 hour ago

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

2 hours ago

ரயிலில் பயணம் செய்பவர்களே… அமலுக்கு வந்தது புதிய விதிமுறைகள் : முழு விபரம்!

ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…

3 hours ago

சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…

நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…

3 hours ago

This website uses cookies.