சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் இல்லத்தில் குழந்தை திருமணம் நடப்பது போன்ற வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலை தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். அண்மையில் இந்த தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு குழந்தை திருமணம் செய்வதாக புகார்கள் எழுந்து வந்தன. அதனடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சில தீட்சிதர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
அதுமட்டுமில்லாமல், குழந்தை திருமண விவகாரத்தில் தடை செய்யப்பட்ட இரட்டை விரல் பரிசோதனை செய்துள்ளதாக ஆளுநர் ஆர்என் ரவி கூறி சர்ச்சையை கிளப்பினார். இதையடுத்து, இந்திய தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் தீட்சிதர்களிடம் விசாரணை நடத்தினார்.
பின்னர், இருவிரல் பரிசோதனை நடைபெற்றது உண்மை எனவும், குழந்தை திருமணம் நடைபெற்றதாக புகைப்படங்கள் வெளியானது சடங்கு செய்த புகைப்படங்கள் எனவும் தேசிய குழந்தைகள் ஆணையம் விளக்கம் அளித்திருந்தார். மேலும், விசாரணை தொடர்பாக தமிழக ஆளுநரிடம் அறிக்கையும் சமர்ப்பித்தார்.
இந்த நிலையில், தீட்சதீர்களின் சிறுமி ஒருவருக்கு சிறுவன் தாலி கட்டுவதற்கு கையில் தாலி வைத்திருக்கும் 3 வினாடிகள் உள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.