தீட்சிதர்கள் இல்லத்தில் குழந்தை திருமணம் ; புகைப்படங்களை தொடர்ந்து வெளியான வீடியோவால் மீண்டும் சர்ச்சை..!!

Author: Babu Lakshmanan
6 June 2023, 8:54 am
Quick Share

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் இல்லத்தில் குழந்தை திருமணம் நடப்பது போன்ற வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலை தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். அண்மையில் இந்த தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு குழந்தை திருமணம் செய்வதாக புகார்கள் எழுந்து வந்தன. அதனடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சில தீட்சிதர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

அதுமட்டுமில்லாமல், குழந்தை திருமண விவகாரத்தில் தடை செய்யப்பட்ட இரட்டை விரல் பரிசோதனை செய்துள்ளதாக ஆளுநர் ஆர்என் ரவி கூறி சர்ச்சையை கிளப்பினார். இதையடுத்து, இந்திய தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் தீட்சிதர்களிடம் விசாரணை நடத்தினார்.

பின்னர், இருவிரல் பரிசோதனை நடைபெற்றது உண்மை எனவும், குழந்தை திருமணம் நடைபெற்றதாக புகைப்படங்கள் வெளியானது சடங்கு செய்த புகைப்படங்கள் எனவும் தேசிய குழந்தைகள் ஆணையம் விளக்கம் அளித்திருந்தார். மேலும், விசாரணை தொடர்பாக தமிழக ஆளுநரிடம் அறிக்கையும் சமர்ப்பித்தார்.

இந்த நிலையில், தீட்சதீர்களின் சிறுமி ஒருவருக்கு சிறுவன் தாலி கட்டுவதற்கு கையில் தாலி வைத்திருக்கும் 3 வினாடிகள் உள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 438

1

0