74வது குடியரசு தினத்தையொட்டி தெலுங்கானா மாநில ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவை அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் புறக்கணித்தது கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
நாட்டின் 74வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அந்தந்த மாநிலங்களில் ஆளுநர்கள் கொடியேற்றி மரியாதை செலுத்தினர். தலைநகர் டெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
சென்னை மெரினாவில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். மேலும், முப்படைகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், தெலுங்கானாவில் ஆளுநர் மாளிகையில் நடந்த குடியரசு தின விழாவை, அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் புறக்கணித்தார்.
ஐதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தையொட்டி அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
ஆனால், ஆளுநருடனான உச்சகட்ட மோதலால், இந்த விழாவில் பங்கேற்காமல், முதலமைச்சர் சந்திசேகர ராவ் புறக்கணித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.