கோவையில் திமுகவினரும், பாஜகவினரும் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: ஜி PAY.. SCAN பண்ணுங்க.. SCAM பாருங்க : பிரதமர் மோடிக்கு எதிராக தமிழகம் முழுவதும் சுவரொட்டிகள்..!!!
கோவையில் பாஜக சார்பில் அண்ணாமலையும், திமுக சார்பில் கணபதி ராஜ்குமாரும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், அண்ணாமலையை ஆதரித்து கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் பாஜகவினர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். இரவு 10 மணிக்கு மேலும் பிரச்சாரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: அண்ணாமலை நாக்கை வெட்டணும்.. பாஜகவில் திருட்டு மொல்லமாரி பசங்கதான் இருக்காங்க.. செல்லூர் ராஜூ ஆவேசம்!
இதை அப்பகுதியில் இருந்த திமுகவினர் தட்டி கேட்டதாக சொல்லப்படுகிறது. இதனால், இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பு உண்டானது. இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், இரு தரப்பினரிடையே சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், கோவையில் தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட திமுகவினரை தாக்கியதாக பாஜகவினர் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாஜகவைச் சேர்ந்த ஆனந்த்குமார், மாசானி உள்ளிட்டோர் மீது 294பி, 323, 147 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து பீளமேடு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…
This website uses cookies.