சென்னை ; யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோத செங்கல் சூளைகள் மீது தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கோவை மாவட்டம் தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் செயல்பட்டு வந்த 130க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் மூடப்பட்டன. ஆனால், மூடப்பட்ட இந்த செங்கல் சூளைகள், ஆனைகட்டி, பெரியநாயக்கன் பாளையம் உள்ளிட்ட யானைகள் வழித்தடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அரசின் அனுமதியின்றி செயல்பட்டு வரும் இந்த செங்கல் சூளைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், செங்கல் சூளைகள் உரிய அனுமதி பெற்றுதான் செயல்படுகின்றனவா..? என்று அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, தமிழ்நாடு மாசுக்கட்டு வாரியம் இன்று அறிக்கை தாக்கல் செய்தது. அதில், 23 செங்கல் சூளைகளில் ஆய்வு செய்ததாக மட்டுமே குறிப்பிட்டு, மற்ற சூளைகள் பற்றி எந்த தகவலையும் தெரிவிக்கப்படவில்லை. இதனால், அதிருப்தியடைந்த நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு, செங்கல் சூளை விவகாரத்தில் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறினர். விரைவில் விரிவான அறிக்கை சமர்பிக்கப்படவில்லை எனில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டி இருக்கும் என்று எச்சரித்தனர்.
இதனையடுத்து, தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், உறுதிமொழியை ஏற்று, இந்த வழக்கை டிசம்பர் 22ம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.