சேலம் : தேங்கி நிற்கும் சாக்கடை நீரை அகற்றாமல் கான்கிரீட் கலவை கொடி கால்வாய் அமைக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் அழகாபுரம் அத்வைத ஆசிரம சாலையில் கால்வாய் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சேரும் சகதியும் நிறைந்திருந்தது.
இந்த நிலையில் அதை அகற்றாமல், கான்கீரிட் கலவை கொட்டி மாநகராட்சி ஊழியர்கள் கால்வாய் அமைத்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். சாக்கடை நீரை அகற்றாமல் கான்கீரிட் கலவை கொட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், இந்த வீடியோவை பகிரிந்த பாஜக நிர்வாகி சிடிஆர் நிர்மல்குமார் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். அதில் சொந்த வீட்டுக்கு இந்த மாதிரி கான்கிரீட் போடுவீங்களா?
மக்களின் உழைப்பில் இருந்து வந்த பணத்தை இப்படியா கொட்டுவது?
இடம்: சேலம் மாநகராட்சி 17 வது வார்டு புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள அத்வைதா ஆசிரமம் ரோட்டில் சாக்கடை நீரை அகற்றாமல் கான்கிரீட்
என பதிவிட்டு திமுக தலைமை கழகமான அண்ணா அறிவாலயத்திற்கு டேக் செய்துள்ளார். இந்த பதிவுக்கு நெட்டிசன்களும் தமிழக அரசுக்கு எதிராக விமர்சனம் செய்து வருகின்றனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.