சேலம் : தேங்கி நிற்கும் சாக்கடை நீரை அகற்றாமல் கான்கிரீட் கலவை கொடி கால்வாய் அமைக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் அழகாபுரம் அத்வைத ஆசிரம சாலையில் கால்வாய் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சேரும் சகதியும் நிறைந்திருந்தது.
இந்த நிலையில் அதை அகற்றாமல், கான்கீரிட் கலவை கொட்டி மாநகராட்சி ஊழியர்கள் கால்வாய் அமைத்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். சாக்கடை நீரை அகற்றாமல் கான்கீரிட் கலவை கொட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், இந்த வீடியோவை பகிரிந்த பாஜக நிர்வாகி சிடிஆர் நிர்மல்குமார் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். அதில் சொந்த வீட்டுக்கு இந்த மாதிரி கான்கிரீட் போடுவீங்களா?
மக்களின் உழைப்பில் இருந்து வந்த பணத்தை இப்படியா கொட்டுவது?
இடம்: சேலம் மாநகராட்சி 17 வது வார்டு புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள அத்வைதா ஆசிரமம் ரோட்டில் சாக்கடை நீரை அகற்றாமல் கான்கிரீட்
என பதிவிட்டு திமுக தலைமை கழகமான அண்ணா அறிவாலயத்திற்கு டேக் செய்துள்ளார். இந்த பதிவுக்கு நெட்டிசன்களும் தமிழக அரசுக்கு எதிராக விமர்சனம் செய்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.