ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது இரணியல் காவல்நிலையத்தில் எம்எல்ஏ பிரின்ஸ் புகார் அளித்துள்ளார்.
‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக குளச்சலில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, குளச்சல் தொகுதி எம்எல்ஏவான பிரின்ஸ், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தருடன் இணைந்து காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினார். அவர் பேசிய இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையடுத்து, தன் மீதான அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ் பதிலடி கொடுத்தார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “நான் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் முறைகேடுச் செய்திருப்பதாக் கூறியிருக்கிறீர்கள். உங்களுக்கு திராணியிருந்தால் நீங்கள் கூறிய குற்றச்சாட்டை நீரூபிக்க முடியுமா? இல்லையேல், மேலும் அரசியல் சில்லறைத் தனம் செய்யாமல் பதவி விலக தயாரா?,” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும், தன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாக பாஜக தலைவர் அண்ணாமலை மீது இரணியல் காவல்நிலையத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ் புகார் அளித்துள்ளார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக துணைவேந்தரை கைவசப்படுத்தி பல அரசு பணிகளின் மூலம் முறைகேடாக பணம் சம்பாரித்ததாக அண்ணாமலை கூறியிருப்பதாகவும், உண்மைக்கு புறம்பான இந்தக் குற்றச்சாட்டுகளால், பொதுவாழ்க்கையில் இருக்கும் தனக்கு மிகுந்த மனவேதனையும், அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, தனது புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக அந்தப் புகார் மனுவில் கூறியுள்ளார்.
நடைபயணம் மேற்கொண்டு இருக்கும் அண்ணாமலைக்கு எதிராக காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.