வெளிநாட்டு பணப்பரிவர்த்தனையில் முறைகேடு நடந்ததாகக் கூறி, தனது வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், அதனை காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கலாய்த்துள்ளார்.
சீனர்களுக்கு விசா வாங்கித் தருவதில் ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாகவும், வெளிநாட்டு பணப்பரிவர்த்தனையில் முறைகேடு நடந்ததாகவும் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் மகனும், எம்பியுமான கார்த்தி சிதம்பரத்தின் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் 9 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.
இந்நிலையில், சிபிஐ அதிகாரிகளின் இந்த சோதனையை கிண்டல் செய்து எம்.பி. கார்த்தி சிதம்பரம் டுவிட் போட்டுள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், எத்தனை முறைதான் சோதனை நடத்துவீர்கள்?, தனது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் எத்தனை முறை சோதனை செய்தனர் என்ற கணக்கு மறந்துவிட்டதாகவும், சிபிஐ சோதனையில் இது ஒரு சாதனையாக இருக்கக்கூடும் என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்தப் பதிவிற்கு ஆதரவாகவும், கலாய்த்தும் நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.