சர்ச்சை பேச்சுக்கு முற்றுப்புள்ளி… பின்வாங்கிய திமுக எம்பி தயாநிதி மாறன்… வருத்தம் தெரிவித்து ட்வீட்!!

சர்ச்சை பேச்சுக்கு முற்றுப்புள்ளி… பின்வாங்கிய திமுக எம்பி தயாநிதி மாறன்… வருத்தம் தெரிவித்து ட்வீட்!!

தயாநிதி மாறன் 2019-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசுகையில், இந்தி மொழியை கற்பதால் எந்த பயனும் இல்லை என்பதை விளக்கும் வகையில் தமிழ்நாட்டில் கட்டிடம் கட்டுபவர்கள் எல்லாம் யார்? உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களில் இந்தி மட்டுமே படித்தவர்கள்தான். தமிழ்நாட்டில் தமிழைக் கற்றுக் கொண்டு தற்போது வீடு கட்டுகிறார்கள், சாலை போடுகிறார்கள், கழிப்பறை கழுவுகின்றனர் என கூறியிருந்தார்.

இந்த வீடியோவை திடீரென அண்மையில் பாஜகவினர் சமூக வலைதளங்களில் அதிவேகமாக பரப்பிவிட்டனர். தயாநிதி மாறன் தற்போதுதான் இப்படி பேசுவதாக ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டது. இதனால் வட இந்திய அரசியல் தலைவர்கள் பலரும் தயாநிதி மாறன் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும் கண்டனம் தெரிவித்திருந்தார். ஏற்கனவே சனாதன ஒழிப்பு தொடர்பான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சை இதேபோல பாஜகவினர் திரித்துவிட்டதால் பிரதமர் மோடி முதல் மத்திய அமைச்சர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். அது இந்தியா கூட்டணியிலும் பிரச்சனையை கிளப்பி இருந்தது.

இந்த நிலையில் தமது பழைய வீடியோ பகிர்வு தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தயாநிதி மாறன் பதிலடி கொடுத்தார். ஆனால் அந்த பதிலடியும் பெரும் சர்ச்சையாகிப் போனது. அதாவது, , “வேலையில்லா முடி திருத்துநர் பூனையைப் பிடித்து சிரைப்பாராம். அதே போலதான், இவர்கள் ஏதாவது ஒரு கலகத்தை உருவாக்க வேண்டும். அதிலும் குறிப்பாக பாஜகவைச் சேர்ந்த ஐ.டி. விங், அதிலும் தேசிய அளவில் இந்த ஐ.டி விங்கை சேர்ந்தவர்கள் ஏதாவது ஒரு பிரச்னையை உருவாக்கி, அதைப் பெரிதாக்கி, பூதாகரமாக்கி அதில் பலன் பெறலாம் என்று நினைக்கிறார்கள். அது எடுபடாது” என கூறியிருந்தார் தயாநிதி மாறன்.

இந்த விவகாரத்தை முன்வைத்து முடி திருத்தும் சமூகத்தை அவமரியாதை செய்துவிட்டார் தயாநிதி மாறன் என நாடு முழுவதும் கொண்டு போய் சேர்த்து அடுத்த பஞ்சாயத்தை கூட்டியது. தற்போது இந்த விவகாரத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் தயாநிதி மாறன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் தயாநிதி மாறன் பதிவிட்டுள்ளதாவது: கடந்த ஒன்பது ஆண்டுகால ஒன்றிய பாஜக அரசின் மக்களுக்கான சாதனைகள் என்று சொல்லுவதைக்காட்டிலும் வேதனைகளே அதிக அளவில் உள்ள காரணத்தினால், நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான பாஜக அரசு பெருத்த சரிவை சந்திக்கக் கூடிய சூழல் உருவாகி இருக்கின்றது.

எனவே பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியில் அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியானது தீவிரமாக இறங்கியுள்ளது, அதுவும் குறிப்பாக எதிர்க்கட்சியினர் பேசுகின்ற பேச்சை வெட்டியும், ஒட்டியும், திரித்தும், மறைத்தும் அவைகளை வெளியிட்டும், சமூக வலைதளங்களில் பரப்பியும் புளகாங்கிதம் அடைந்து வருகின்றது, அது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது, நான் அளித்த பதில் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

எந்த ஒரு காலத்திலும் தனிப்பட்ட நபரையோ அல்லது ஒரு குறிப்பிட்ட பிரிவினரையோ காயப்படுத்தும் எண்ணம் எப்போதும் எனக்கு இருந்ததில்லை என்பதை இந்த நேரத்தில் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் எனது கருத்துக்கள் யாரையாவது புண்படுத்தும் வகையில் அமைந்திருந்தால், அதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தயாநிதி மாறன் பதிவிட்டுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.