சென்னை : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 19,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக 19,280 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 22, 238 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 20 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதிசெய்யப்படுவோரின் மொத்த எண்ணிக்கை 33,45,220 ஆக பதிவாகியுள்ளது. இன்று ஒரே நாளில் 25,056 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 31 லட்சத்து 9 ஆயிரத்து 526 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பினால் இன்று ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 37,564 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 2897 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 2456 பேருக்கும், செங்கல்பட்டில் 1430 பேருக்கும், திருப்பூரில் 1425 பேருக்கும், சேலத்தில் 1101 பேருக்கும், ஈரோட்டில் 1070 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.