கொரோனா தொற்றின் அடுத்த திரிபான ‘ஒமைக்ரான் எக்ஸ்.இ.’ திரிபு இந்தியாவில் முதன்முதலாக மும்பையை சேர்ந்த ஒருவருக்கு உறுதிசெய்யப்பட்டிருப்பதாக பி.எம்.சி. (மும்பை) கமிஷ்னர் இக்பால் சிங் சஹால் கூறியுள்ளார். சுமார் 376 பேருக்கு சோதனை செய்யப்பட்டத்தில், ஒருவருக்கு இந்தத் தொற்று உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து இக்பால் சிங் தெரிவித்துள்ள தகவலில், பரிசோதனை செய்யப்பட்டவர்களில் 230 பேர் மும்பையை சேர்ந்தவர்கள்தான். இவர்களில் 228 பேருக்கு ஒமைக்ரான் இருக்கலாம் என தெரிகின்றது. மற்றவர்களில் கப்பா திரிபு ஒருவருக்கும், எக்ஸ்.இ. திரிபு ஒருவருக்கும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
புது திரிபு உறுதியானவர்களுக்கு தீவிர பாதிப்பு எதுவும் இல்லை என்றுள்ளார். இந்த எக்ஸ்.இ. திரிபு, முதன்வகை ஒமைக்ரானை விடவும் 10 மடங்கு வேகமாக பரவக்கூடிய தன்மையுடையது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒமைக்ரான் XE தொற்று முதலில் பிரிட்டன் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதன் பரவல் சீனாவிலேயே அதிகம் இருந்தது. இதனால் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் மகாராஷ்டிராவில் மும்பை நகரில் ஒமைக்ரான் XE உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
This website uses cookies.