செந்தில் பாலாஜிக்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற காவலை ரத்து செய்யக்கோரியை மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிபதி தள்ளுபடி செய்தார்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளது. கைது நடவடிக்கையின் போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜுன் 28ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இந்த நீதிமன்ற கஸ்டடியை எதிர்த்து திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதோடு, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு, தனியார் மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்ய அனுமதிக்க கோரிக்கை, 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரிய அமலாக்கத்துறை மனுக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களின் விசாரணை இன்று நடைபெறும் என்று நீதிபதி அல்லி தெரிவித்திருந்தார். அதன்பேரில், முதலாவதாக, நீதிமன்ற காவலை எதிர்த்த வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி, ஏற்கனவே நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளதால் மனு செல்லத்தக்கதல்ல எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
இதைத் தொடர்ந்து, ஜாமீன் மனு மீதான விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.