கடலூரில் அம்மா உணவக பெண் ஊழியர்களை 16 பேரை பணிநீக்கம் செய்ததைக் கண்டித்து, நள்ளிரவில் பெண் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூரில் ஊழவர் சந்தை அருகிலும், தலைமை மருத்துவமனையிலும் 2 அம்மா உணவகங்கள் கடந்த 2015ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு தற்போது 16 பெண் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இவர்களை பணியில் இருந்து நீக்கி விட்டதாகவும், சாவியை புதிதாக நியமிக்கப்பட்ட ஊழியர்களிடம் ஒப்படைக்குமாறும் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று உத்தரவிட்டனர். இதையறிந்து, அதிர்ச்சியடைந்த அம்மா உணவக ஊழியர்கள், நேற்று இரவு 8.30 மணிக்கு கடலூர் அரசு மருத்துவமனை அம்மா உணவகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்கள் கூறியதாவது :- கடந்த 7 ஆண்டுகளாக அம்மா உணவகத்தில் வேலை பார்த்து வருகிறோம். கொரோனா காலத்திலும் எங்கள் உயிரையும் துச்சமென நினைத்து பணி செய்தோம். ஆனால் எங்களை திடீரென மாநகராட்சி நிர்வாகம் வேலையில் இருந்து நீக்கி விட்டு, எங்களுக்கு பதிலாக புதிய ஊழியர்களை நியமித்துள்ளதாக கூறுகின்றனர்.
ஆகவே எங்களுக்கு வேறு வாழ்வாதாரம் கிடையாது. எங்களை வேலையில் இருந்து நீக்கக்கூடாது. தொடர்ந்து பணி செய்ய மாநகராட்சி நிர்வாகமும், மாவட்ட ஆட்சியரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக பிரமுகர் அவருக்கு ஆதரவானவர்களை பணியில் நியமிக்க முடிவு செய்து இதுபோன்று செயல்படுகிறார். நாங்கள் சாவியை யாரிடமும் ஒப்படைக்க மாட்டோம். மேலும் எங்களை பணிக்கு சேர்க்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வேலைக்கு உத்தரவாதம் அளிக்கும் வரையில் போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர். போராட்டம் இரவு 11 மணியை கடந்தும் நடைபெற்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.