பாஜக ஆட்சிக்கு வந்த பின்தான் கடன் அதிகரிப்பு.. நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பிடிஆர் பதில்!!!
மத்திய அரசின் கடனை ஒப்பிடும்போது தமிழ்நாடு அரசின் கடன் குறைவாக உள்ளது என தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ரூபாய் கணக்கில் கடனை ஒப்பிடக்கூடாது, உற்பத்தியில் எவ்வளவு கடன் என்பது முக்கியம். இதனால் கடனை பார்க்கும்போது அந்த மாநிலம் அல்லது நாட்டின் உற்பத்தியை பார்க்கவேண்டும்.
அதாவது, கடனை ரூபாயில் கணக்கிடாமல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கணக்கிட வேண்டும். தமிழ்நாடு அரசின் கடன் GDP-யில் 27 சதவிகிதம்தான்.
ஆனால் மத்திய அரசின் கடன் GDP-யில் 60% இருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் இது அதிகமானது. தமிழகத்தில் 16, 17 சதவீதம் உற்பத்தியில் இருந்த கடனை 27 சதவிகிதம் வந்தது கடந்த 2014-21ல் இருந்த அதிமுக ஆட்சி.
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு கடனை ஒரு சதவீதத்திற்குள்ளேவே வைத்துள்ளோம். மேலும், 9 ஆண்டுகளில் முதல் முறையாக வருவாய் பற்றாக்குறையும், மொத்த கடன் வாங்குறதையும் ரூபாய் கணக்கிலேயே குறைத்தது எங்கள் ஆட்சியில் தான். இதனை மேலும் கட்டுப்படுத்த படிப்படியாக செயல்பட்டு வருகிறோம் எனவும் கூறினார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.