கோவை : பணத்தைப் பெற்றுக் கொண்டு வேட்பாளர்களை தேர்வு செய்ததாக கோவையில் திமுக பொறுப்பாளர் சிஆர் ராமச்சந்திரனை கண்டித்து அக்கட்சியின் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிப்.,19ம் தேதி நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணி, பாஜக, பாமக என பல்முனை போட்டி நிலவுகிறது. அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது. வேட்பாளர் தேர்வில் திருப்தி இல்லாமல் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக, ஆளும் திமுகவில்தான் அதிருப்தி அலைகள் அதிகம் வீசி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கோவையிலும் திமுக வேட்பாளர் தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கூறி திமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகராட்சியின் 77 வது வார்டில் திமுகவால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராஜலட்சுமியை மாற்றக்கோரி, 77 வது வார்டு செயலாளர் மதியழகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் செல்வபுரம் பகுதியில் போராட்டம் நடத்தினர்.
அப்போது, திமுக பொறுப்பாளர் சி.ஆர். இராமச்சந்திரன், பணத்தைப் பெற்றுக் கொண்டு வேட்பாளர்களை தேர்வு செய்ததாகவும், தகுதியில்லாதவர்களுக்கு சீட் ஒதுக்கியதால், உள்ளாட்சி தேர்தல் பணிகளில் ஈடுபடப் போவதில்லை என்றும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை செல்வபுரம் போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.